states

img

போலி ஊசி மருந்து நிறுவனம் கண்டுபிடிப்பு

மகாராஷ்டிரா தலைநகர் மும்பை யில் ரத்தச்சோகை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஊசி மருந்து கள் தரமற்றதாக இருப்பதாக மருத்து வர்கள் குற்றம் சாட்டினர். மும்பை போலீ சாரின் சோதனை மற்றும் ஆய்வறிக் கைக்கு பின்னர் ஊசி மருந்துகள் அனைத்தும் போலியானதா என கண்டு பிடிக்க, மும்பை காவல்துறை ஆணை யம் உடனடி விசாரணைக்கு உத்தரவிட் டது. இதையடுத்து ஊசி மருந்து சப்ளை செய்த தில்லியைச் சேர்ந்த மருந்து நிறு வனத்திடம் மும்பை போலீசார் நேரடி விசா ரணை மேற்கொண்டனர். 

அப்போது, தில்லியைச் சேர்ந்த நிறு வனம், “இதை நாங்கள் தயாரிக்க வில்லை. உத்தரப்பிதேச மாநிலம் ஆக்ரா வில் உள்ள ஓரோபர் பெரிக் கார்பாக்சி மால்டோஸ் (எப்சிஎம்) என்ற நிறுவனம் தான் எங்களுக்கு ஊசி மருந்தை சப்ளை  செய்கிறது” என்று கூறியது. தொடர்ந்து  மும்பை போலீசார் ஆக்ரா எப்சிஎம் நிறு வனத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் முடிவில் மும்பைக்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங்களுக்கு எப்சிஎம் நிறுவனம் ஊசி மருந்து சப்ளை செய்துள்ளது கண்  டறியப்பட்டுள்ளது. இந்த விவகாரம் கடும்  அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஒன்றிய பாஜக அரசு  இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை  எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.